search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
    X
    சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

    சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ

    மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக்கொள்ள மஞ்ச்ரேக்கர் வேண்டுகோள் விடுத்த நிலையில், பிசிசிஐ அதை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) டெலிவிஷன் வர்ணனையாளர் குழுவில் இருந்தார்.


    பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

    ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி அல்லது 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. தற்போது ஐ.பி.எல். போட்டி வர்ணனையாளர் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஆனால் சுனில் கவாஸ்கர், எல். சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், ஹர்ஷா போக்லோ போன்றோருக்கு பிசிசிஐ வர்ணனை செய்யுமாறு இ-மெயில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு இ-மெயில் அனுப்பவில்லையாம். இதனால் அவரது கோரிக்கை நிராகிரிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர்தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
    Next Story
    ×