என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சில நேரங்களில் சச்சினையும் விஞ்சி விடுவார் ராகுல் டிராவிட்: பாக். வீரர் சொல்கிறார்
Byமாலை மலர்5 Aug 2020 5:00 PM GMT (Updated: 5 Aug 2020 6:01 PM GMT)
சில நேரங்களில் சச்சினைக் காட்டிலும் ராகுல் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ரஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். அதேவேளையில் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். இந்திய அணி தடுமாறிய போதெல்லாம் காப்பாற்றிய வரலாறு ராகுல் டிராவிட்டுக்கு உண்டு.
இந்நிலையில் சில நேரங்களில சச்சினைக் காட்டிலும் ராகுல் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேன் என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
ரமீஸ் ராஜா இதுகுறித்து கூறுகையில் ‘‘தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் கடுமையான ஆடுகளத்தில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். நங்கூரம் பாய்ச்ச மாதிரி நின்று தடுப்பாட்டம் ஆடுகையில், சில நேரங்களில் சச்சின் தெண்டுல்கரையும் விஞ்சிவிடுவார்.
இருந்தாலும், சச்சினை போன்று இயற்கையாகவே ராகுல் டிராவிட்டிற்கு திறமை கிடையாது. ஆனால், அர்ப்பணிப்பு, தீர்மானித்தல், பவர் ஆகியவற்றின் மூலம் சிறந்த வீரராக முடிந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X