search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின், சோயிப் அக்தர், அப்ரிடி
    X
    சச்சின், சோயிப் அக்தர், அப்ரிடி

    சச்சின் தெண்டுல்கர் இருவர் பந்து வீச்சை எதிர்கொள்ள அஞ்சினார்: ஷாகித் அப்ரிடி

    இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இரண்டு பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அஞ்சினார் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. இவர் அவ்வப்போது இந்திய வீரர்களை விமர்சனம் செய்வதுண்டு. அதற்கான தக்க பதிலடியையும் பெற்று விடுவார்.

    சமீபத்தில் கூட பாகிஸ்தான் அணி இந்தியாவை கிரிக்கெட்டில் பலமுறை துவம்சம் செய்திருக்கிறது என்றார். இதற்கு முன்னாள் வீரர்கள் பலர் பதிலடி கொடுத்தனர்.

    இந்நிலையில் சச்சின் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆக்தர் பந்தையும், சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில் ‘‘நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்லமாட்டார். சோயிப் அக்தரின் சில ஸ்பெல்களில் சச்சின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் சிறந்த பேட்ஸ்களும் நடுங்கினர்.

    மிட்-ஆஃப் அல்லது கவர் திசையில் பீல்டிங் செய்யும்போது நீங்கள் அதை கவனிக்கலாம். அப்போது ஒரு வீரரின் உடல் அசைவுகள் தெரியும். ஒரு பேட்ஸ்மேன் வழக்கமான நிலையில் விளையாடுகிறாரா? அல்லது நெருக்கடியில் இருக்கிறாரா? என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

    சோயிப் அக்தர் பயந்தார் என்று நான் சொல்ல மாட்டேன். சச்சின் தெண்டுல்கர் உள்பட பல முன்னணி பேட்ஸ்மேன்கள் அக்தரை எதிர்கொள்ளும்போது பேக்புட் செல்ல வேண்டியிருந்தது.

    உலக கோப்பையின்போது சச்சின் தெண்டுல்கர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார். இது பெரிய விஷயல்ல. வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகும்போது, எதிர்கொள்ளவது கடினமானதாகிவிடும்.

    அப்ரிடி இப்படி சொல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, ‘‘நான் ஸ்கொயர் லெக்கில் பீல்டிங் செய்தபோது, சோயிப் அக்தர் பந்து வீசும்போது சச்சின் கால்கள் நடுங்கியதை நான் பார்த்தேன்’’ எனக் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×