என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் ஓஜா
Byமாலை மலர்26 May 2020 10:44 AM GMT (Updated: 26 May 2020 10:44 AM GMT)
இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா வெளிநாட்டு லீக்குகளில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கோர உள்ளார்.
வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்குவதில்லை. உள்ளூர், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றபின் சில வீரர்கள் பிசிசிஐ-யின் அனுமதியோடு விளையாடி வருகின்றனர்.
வீரேந்திர சேவாக், ஜாகீர் கான் ஆகியோர் டி10 லீக்கில் விளையாடியுள்ளனர். யுவராஜ் சிங் குளோபல் டி20 தொடரில் விளையாடிள்ளனர்.
இந்நிலையில் பிரக்யான் ஓஜா டி20 மற்றும் தி ஹண்ட்ரெட் தொடர்களில் விளையாட அனுமதி கேட்க இருக்கிறார்.
‘‘இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் சில லீக்குகளில் விளையாட முயற்சி செய்து வருகிறேன். மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் பிசிசிஐ-யின் அனுதியை பொருத்துதான் எல்லாம் உள்ளது. அதற்கான நேரம் வரும்போது பிசிசிஐ-யிடம் பேசுவேன். என்ன நடக்கும் என்பது தற்போது யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிசிசிஐ-க்கு வேபண்டுகோள் வைப்பேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X