search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரக்யான் ஓஜா"

    • தேசிய முகாமில் ரோகித் மிகவும் சிறப்பான வீரர் என்று எல்லோரும் சொன்னார்கள்.
    • அவர் அதிகமாக பேசியதில்லை. ஆனால் விளையாடும்போது ஆக்ரோஷமாக இருப்பார்.

    முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா ரோகித் சர்மாவுடன் தனது ஆரம்ப உரையாடல்களில் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய முகாமில் தான் ரோகித்தை முதலில் சந்தித்தேன். அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கிரிக்கெட் கிட் வாங்க பால் பாக்கெட் விற்பனை செய்ததாக எங்களுக்குள் நடந்த விவாதங்களின் போது உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்திருக்கிறார்.

    தேசிய முகாமில் ரோகித் மிகவும் சிறப்பான வீரர் என்று எல்லோரும் சொன்னார்கள். அங்கு அவருக்கு எதிராக விளையாடி விக்கெட்டை வீழ்த்தினேன். அவர் அதிகமாக பேசியதில்லை. ஆனால் விளையாடும்போது ஆக்ரோஷமாக இருப்பார். 

    உண்மையில், நாங்கள் ஒருவரையொருவர் அறியாதபோது அவர் ஏன் என்னிடம் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார் என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அதன் பிறகு எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது.

    இப்போது அவரைப் பார்க்கும்போது, எங்கள் பயணம் எப்படி ஆரம்பித்தது, எப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு ஓஜா கூறினார்.

    ×