search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக்கேல் ஹோல்டிங்
    X
    மைக்கேல் ஹோல்டிங்

    இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த ரூ. 3.78 கோடி எங்கே? மைக்கேல் ஹோல்டிங் கேள்வி

    வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்களுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த ரூ. 3.78 கோடி எங்கே? என மைக்கேல் ஹோல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
    கிங்ஸ்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான மைக்கேல் ஹோல்டிங் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது;-

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர்களின் நலனுக்காக 2014-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.3.78 கோடியை ( இன்றைய மதிப்பு ) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி. சி.ஐ.) வழங்கியது. நான் ஒரு முன்னாள் வீரர். அதனால் அந்த பணம் எனக்கு வேண்டும் என்று கேட்கவில்லை.

    ஆனால் அந்தப்பணம் பற்றி கேள்வியேபடாத பல முன்னாள் வீரர்களை எனக்கு தெரியும். ஒருவேளை முன்னாள் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. வழங்கிய தொகையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அளித்திருந்தால் அதைப்பற்றி பகிரங்கமாக விளம்பரம் செய்திருப்பார்கள்.

    பி.சி.சி.ஐ. வழங்கிய ரூ.3.78 கோடி பணம் எங்கே போனது. முன்னாள் வீரர்களுக்காக வழங்கப்பட்ட இந்த தொகையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தவறாக பயன்படுத்தி உள்ளது.

    என்னுடைய அடுத்த பேட்டியில் இது குறித்த கூடுதல் விவரங்களை அளிப்பேன்.

    இவ்வாறு மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
    Next Story
    ×