என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அர்ஜுனா விருதுக்கு இரண்டு வீராங்கனை பெயர்களை பரிந்துரை செய்கிறது பிசிசிஐ
Byமாலை மலர்13 May 2020 10:26 AM GMT (Updated: 13 May 2020 10:26 AM GMT)
மத்திய அரசு வழங்கும் விளையாட்டுத்துறைக்கான அர்ஜுனா விருதுக்கு இரண்டு வீராங்கனை பெயர்களை பரிந்துரை செய்கிறது பிசிசிஐ.
விளையாட்டுத்துறைகளில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டின் சங்கத்திடமும் தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அனுப்பி வைக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சங்கங்கள் பரிந்துரை செய்யும் வீரர்கள் தகுதியானவர்கள்தானா? என்பதை இதற்கான ஆய்வு கமிட்டி ஆராய்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.
இதனடிப்படையில் பிசிசிஐ ஷகா பாண்டே, தீப்தி ஷர்மா ஆகிய வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும், சிறப்பாக விளையாடி வரும் இருவரும் கிரிக்கெட் செயல்பாட்டு குழுவால் ஈர்க்கப்பட்டதால் பரிந்துரை செய்ய இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X