என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஒப்புதல்
Byமாலை மலர்8 May 2020 9:09 AM GMT (Updated: 8 May 2020 9:09 AM GMT)
வீரர்கள் தொடர்ச்சியாக ஏராளமான போட்டிகளில் விளைாட இருப்பதால், ஐந்து மாற்று வீரர்களுக்கு கால்பந்து கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா காரணமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட உலக விளையாட்டிகள் முடங்கி போயுள்ளன. தற்போது மீண்டும் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா காரணமாக முடங்கிய பல்வேறு கால்பந்து தொடர்கள் விரைவில் தொடங்க உள்ளன. ஜெர்மனியின் முன்னணி பண்டேஸ்லிகா கால்பந்து தொடர் இம்மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அடுத்தடுத்து போட்டிகள் நடப்பதால் வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (ஐஎப்ஏபி) சார்பில், மாற்று வீரர்கள் விதியில் தற்காலிக மாற்றம் செய்ய, சர்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் ஆலோசித்தது.
இதன்படி, இனிமேல் ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி தரப்படும். இந்த மாற்றங்கள் 2020 - 2021 சீசன் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X