என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முகத்தில் குத்துவேன்: மேத்யூ ஹெய்டன் இப்படி எச்சரிக்க காரணம்?- நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
Byமாலை மலர்6 May 2020 1:18 PM GMT (Updated: 6 May 2020 4:29 PM GMT)
திரும்பவும் இதுபோன்று கிண்டல் செய்தால் முகத்தில் குத்துவேன் என்று மேத்யூ ஹெய்டன் எச்சரித்தார் என பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இளம் வயதிலேயே அறிமுகம் ஆனவர் விக்கெட் கீப்பர் பார்தீவ் பட்டேல். தொடர்ந்து இவரால் இந்திய அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு தகவல்களை தெரியப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் மேத்யூ ஹெய்டனுடன் நடைபெற்ற மோதல் குறித்து பார்தீவ் பட்டேல் நினைவு கூர்ந்துள்ளார்.
பார்தீவ் பட்டேல் இதுகுறித்து கூறுகையில் ‘‘2004-ல் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது இர்பான் பதான் மேத்யூ ஹெய்டனை அவுட்டாக்கினார். ஏற்கனவே ஹெய்டன் சதம் அடித்திருந்தாலும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இர்பான் பந்தில் வீழ்ந்தார். அப்போது நான் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றேன். ஹெய்டன் என்னை கடந்து செல்லும்போது ‘ஹூ ஹூ’ என்று செய்தேன்.
இதனால் என்மீது மிகவும் கோபமாக இருந்தார். பிரிஸ்பேன் வீரர்களின் அறை குகை போன்று இருக்கும். அதில் நின்றிருந்தார். நான் மீண்டும் அறைக்கு செல்லும்போது, இதுபோல் மீண்டும் செய்தால் முகத்தில் குத்து விடுவேன் என்று எச்சரித்தார். நான் அவரிடம் வருத்தம் தெரிவித்து அங்கே நின்றேன். அவர் சென்று விட்டார்’’ என்றார்.
அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடும்போது நண்பர்களாக மாறிவிட்டோம் எனத் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X