search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலிஷ் பிரிமீயர் லீக்
    X
    இங்கிலிஷ் பிரிமீயர் லீக்

    இங்கிலிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரை நடத்தி முடிக்க கிளப்புகள் உறுதி

    கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இங்கிலிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரை நடத்தி முடித்திட கிளப்புகள் உறுதியாக உள்ளன.
    கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக கடந்த மாதம் 13-ந்தேதியில் இருந்து இங்கிலிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக தற்போது இங்கிலாந்தில் கொரோனா மையம் கொண்டுள்ளது.

    இதனால் எப்போது சகஜ நிலை திரும்பும் என்ற நிலை உறுதியாக தெரியவில்லை. இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் இன்னும் 92 போட்டிகள் மீதமுள்ளது. சீசன் முடிவடைந்தால்தான் சாம்பியன்ஸ் லீக், வீரர்கள் டிரான்ஸ்பர் போன்ற அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல முடியும்.

    இதனல் இங்கிலிஷ் பிரிமீயர் லீக் அமைப்பாளர்கள் 20 கிளப்புகளுடனும் என்று வீடியோ கான்பெரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியது. அப்போது பெரும்பாலான கிளப்புகள் போட்டிகளை அனைத்தும் நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. சில கிளப்புகள் ஜூன் 30-ந்தேதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தின.

    இங்கிலிஷ் பிரிமீயர் லீக் அமைப்பாளர்கள் ‘‘போட்டிகள் அனைத்தையும் நடத்தி முடித்திட வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ஆனால், தற்போதுள்ள தேதிகள் அனைத்தும் தற்காலிகம்தான்’’ என்று தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×