என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு
Byமாலை மலர்17 April 2020 1:11 PM GMT (Updated: 17 April 2020 1:11 PM GMT)
இந்தியா எங்களுடன் இருநாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட மறுத்து வருவதால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தன் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை அடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது இந்தியா - பகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர். அது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகை கிரிக்கெட் என்றாலும் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.
இதனால் ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் மூலம் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும்.
ஆனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால் அதை நிறுத்தும் வரைக்கும் இரு நாடுகளுக்கிடையில் நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று இந்திய அரசு முடிவு எடுத்தது. 2008-ம் ஆண்டுக்குப்பின் இருநாடுகளுக்கு இடையிலான தொடர் நடைபெறாமல் உள்ளது.
இருநாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க பாகிஸ்தான் எவ்வளவோ முயற்சி எடுத்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி இல்லாமல் எங்களால் விளையாட முடியாது என்று பிசிசிஐ கைவிரித்து விட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை டென்ஸ்போர்ட்ஸ் மற்றும் பிடிவி ஆகியவற்றிற்கு சுமார் 149 மில்லியன் டாலருக்கு கொடுத்திருந்தது. ஆனால் இரண்டு டிவி நிறுவனங்களும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான இரண்டு தொடர்களை நடத்தினால்தான் இந்தத் தொகையை தருவோம் என்று ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.
தற்போது போட்டி நடைபெறாததால் 90 மில்லியன் டாலரை (இந்திய பண மதிப்பில் 688.40 கோடி ரூபாய்) குறைத்துள்ளன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஒளிபரப்பு உரிமம் மூலம் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஸ்பான்சர், டிக்கெட் விற்பனை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு இன்றும் அதிகமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X