search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்
    X
    ஐரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்

    லீக்குகள் முடிவு பெறாவிடில் இழப்பை சந்திக்க நேரிடும்: ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் தொற்றால் தள்ளி வைக்கப்பட்டுள்ள கால்பந்து லீக்குகள் முடிவு பெறாவிடில் இழப்பை சந்திக்க நேரிடும் என ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
    ஐரோப்பியாவில் உள்ள 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்பந்து கிளப் அணிகள் உள்ளன. இவைகள் ஐரோப்பியன் கிளப் அசோசியேசன் மற்றும் ஐரோப்பியன் லீக்குகள் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    29 நாடுகளிலும் உள்ள கிளப்புகள் தரம் பிரித்து லீக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அணிகள் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தகுதிபெறும்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து லீக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் இருக்கிறது. இதனால் நிறுத்தப்பட்ட போட்டிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை.

    இதனால் பெல்ஜியம் லீக் போட்டியின் அமைப்பாளர்கள் இத்துடன் தங்களுடைய லீக்கை முடித்துக் கொண்டு புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மற்ற லீக்குகளின் அமைப்புகளும் இதே முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுவாக போட்டிகள் அனைத்தும் முடிந்த பிறகு புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து அணிகள் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான அட்டவணை தயாரிக்கப்படும்.

    ஒருவேளை பாதிலேயே லீக்குகளை முடித்துக்கொண்டால் முன்னணி அணிகள் சாம்பியன்ஸ் லீக்கை தவறவிட வேண்டிய நிலை ஏற்படும் என ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
    Next Story
    ×