search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரேம் ஸ்மித்
    X
    கிரேம் ஸ்மித்

    கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தாலும் வீரர்கள் தயாராக 42 நாட்கள் ஆகும்: கிரேம் ஸ்மித் சொல்கிறார்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் வீரர்கள் தொடருக்கு தயாராக குறைந்தது ஆறு வாரங்கள் தேவை என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச, உள்ளூர் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிறிது நேரம் உடற்பயிற்சிக்குப்பின் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி பொழுதை போக்குகின்றனர்.

    கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் வீரர்கள் தயாராக குறைந்த 42 நாட்கள் ஆகும் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டின் இடைக்கால இயக்குனர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆனால், எந்தவொரு கிரிக்கெட் தொடருக்கும் வீரர்கள் தயாராக, அதற்கு முன் 42 நாட்கள் தேவை என்று மதிப்பிடுகிறோம்’’ என்றார்.

    தென்ஆப்பிரிக்கா அணி ஜூன் மாதத்தில் இலங்கை சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஸ்மித் கூறுவதை வைத்து பார்த்தார் மே மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்கள் வந்தால் கூட இலங்கை தொடர் சாத்தியமில்லை.

    அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூலை 15-ந்தேதிக்குப்பின் நடக்க இருக்கிறது. நிலைமை கட்டுக்குள் வந்தால் தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் இருந்து கிரிக்கெட்டை தொடங்க வாய்ப்புள்ளது.
    Next Story
    ×