என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு நடவடிக்கை - பிசிசிஐ ரூ. 51 கோடி, சுரேஷ் ரெய்னா ரூ. 52 லட்சம் நிதியுதவி
Byமாலை மலர்28 March 2020 10:04 PM GMT (Updated: 28 March 2020 10:04 PM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாயும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கினர்.
மும்பை:
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் கொரோனா வைரசால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசுக்கு வழங்கலாம் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதேபோல், சிஎஸ்கே அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 52 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு 31 லட்ச ரூபாயும், உத்தரபிரதேச முதல்மந்திரியின் நிவாரண நிதி கணக்கிற்கு 21 லட்ச ரூபாயும் (மொத்தம் ரூ. 52 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X