என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டு வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த தயார்: ஐபிஎல் அணி நிர்வாகி சொல்கிறார்
Byமாலை மலர்17 March 2020 1:38 PM GMT (Updated: 17 March 2020 1:38 PM GMT)
வெளிநாட்டு வீரர்களை இந்தியா வர அனுமதித்தால் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த தயாராக இருக்கிறோம் என ஐபிஎல் அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் டி20 லீக் தொடரை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. மத்திய அரசு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை விசா கொடுக்க தடைவிதித்திருந்தது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சில நாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமை படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 31-ந்தேதி வரை இந்த நிலைமை நீடித்து மற்ற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்பட்டால் ஐபிஎல் போட்டிக்கான வெளிநாட்டு வீரர்களை வரவழைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த தயாராக இருக்கிறோம் என தொடரில் பங்கேற்கும் அணியைச் சேர்ந்த அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணியின் நிர்வாகிகளில் ஒருவர் கூறும்போது ‘‘சில நாடுகளில் இருந்து வரும் நபர்கள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் இது நீடித்தால், அது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்காது. அரசிடம் இருந்து அனுமதி பெற்று விசா வழங்கப்பட்டால், வீரர்களை தனிமைப்படுத்துவது மிகப்பெரிய விஷயமாக இருக்காது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் அவர்களை இங்கே ஏப்ரல் முதல்வாரத்தில் வரவழைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடியும். ஆனால், முதலில் வெளிநாட்டு வீரர்களுக்கு விசா வழங்க வேண்டும். இதனால் மார்ச் 31-ந்தேதி வரை அரசின் முடிவிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது’’ என்றார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சில நாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமை படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் 31-ந்தேதி வரை இந்த நிலைமை நீடித்து மற்ற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்பட்டால் ஐபிஎல் போட்டிக்கான வெளிநாட்டு வீரர்களை வரவழைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த தயாராக இருக்கிறோம் என தொடரில் பங்கேற்கும் அணியைச் சேர்ந்த அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணியின் நிர்வாகிகளில் ஒருவர் கூறும்போது ‘‘சில நாடுகளில் இருந்து வரும் நபர்கள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ந்தேதிக்கு பிறகும் இது நீடித்தால், அது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்காது. அரசிடம் இருந்து அனுமதி பெற்று விசா வழங்கப்பட்டால், வீரர்களை தனிமைப்படுத்துவது மிகப்பெரிய விஷயமாக இருக்காது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் அவர்களை இங்கே ஏப்ரல் முதல்வாரத்தில் வரவழைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்த முடியும். ஆனால், முதலில் வெளிநாட்டு வீரர்களுக்கு விசா வழங்க வேண்டும். இதனால் மார்ச் 31-ந்தேதி வரை அரசின் முடிவிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X