என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையின் எப்.சி. அணி கடைசி லீக் ஆட்டத்தில் கவுகாத்தியுடன் இன்று மோதல்
Byமாலை மலர்25 Feb 2020 6:40 AM GMT (Updated: 25 Feb 2020 6:40 AM GMT)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி கடைசி லீக் ஆட்டத்தில் கவுகாத்தியுடன் இன்று மோத உள்ளது.
சென்னை:
6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி தொடர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னையின் எப்.சி., ஆட் லெடிசோ டி கொல்கத்தா, எப்.சி. கோலா, பெங்களூரு எப்.சி., மும்பை சிட்டி, ஒடிசா எப்.சி., கேரளா, ஜாம்ஷட்பூர் நார்த்ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இதுவரை நடந்த 89 லீக் ஆட்டங்கள் முடிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூர், சென்னை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. மற்ற 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.
இன்று 90-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் கவுகாத்தியில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் சென்னையின் எப்.சி.- கவுகாத்தி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னையின் எப்.சி. 17 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால் 3-வது இடத்துக்கு முன்னேறும். இதனால் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.
ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்ட கவுகாத்தி ஆறுதல் வெற்றிக்காக போராடும். அந்த அணி 17 ஆட்டத்தில் 2 வெற்றி, 7 டிரா, 8 தோல்வியுடன் 13 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி தொடர் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னையின் எப்.சி., ஆட் லெடிசோ டி கொல்கத்தா, எப்.சி. கோலா, பெங்களூரு எப்.சி., மும்பை சிட்டி, ஒடிசா எப்.சி., கேரளா, ஜாம்ஷட்பூர் நார்த்ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இதுவரை நடந்த 89 லீக் ஆட்டங்கள் முடிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூர், சென்னை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. மற்ற 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.
இன்று 90-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் கவுகாத்தியில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் சென்னையின் எப்.சி.- கவுகாத்தி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னையின் எப்.சி. 17 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால் 3-வது இடத்துக்கு முன்னேறும். இதனால் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.
ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்ட கவுகாத்தி ஆறுதல் வெற்றிக்காக போராடும். அந்த அணி 17 ஆட்டத்தில் 2 வெற்றி, 7 டிரா, 8 தோல்வியுடன் 13 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X