என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்கள் அதே அணி அல்ல: இந்த முறை எங்களால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்கிறார் விராட் கோலி
Byமாலை மலர்19 Feb 2020 8:48 AM GMT (Updated: 19 Feb 2020 8:48 AM GMT)
நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் சாதனை மிகவும் மோசமாக இருப்பது குறித்து கவலை இல்லை, எங்களால் தொடரை வெல்ல முடியும் என்கிறார் விராட் கோலி.
இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்தில் மண்ணில் மிகப்பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1968-ம் ஆண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. அதன்பின் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவோம் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எங்களுடைய உடற்தகுதி மற்றும் கவனம் செலுத்தும் நிலை ஆகியவற்றை கொண்டே நாங்கள் தயாராகி உள்ளோம். இதனால் உலகின் எந்தவொரு அணிக்கெதிராகவும் எங்களால் போட்டியிட முடியும். இந்த வகையான நம்பிக்கையை நாங்கள் இந்தத் தொடரில் எடுத்துச் செல்வோம்.
கடந்த முறை நாங்கள் இங்கே வந்தபோது தொடரை 0-1 எனத் தோற்றோம். தற்போது இருப்பது அதே அணியல்ல. தற்போது நாங்கள் முழுமையடைந்த அணியை பெற்றுள்ளோம். நியூசிலாந்து திறமையான பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், சிறந்த பீல்டர்களை கொண்ட அணி. அவர்கள் எளிதான ஆட்டத்தை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியான பயன்படுத்தி போட்டியை நம் பக்கம் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில் தற்போது இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவோம் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எங்களுடைய உடற்தகுதி மற்றும் கவனம் செலுத்தும் நிலை ஆகியவற்றை கொண்டே நாங்கள் தயாராகி உள்ளோம். இதனால் உலகின் எந்தவொரு அணிக்கெதிராகவும் எங்களால் போட்டியிட முடியும். இந்த வகையான நம்பிக்கையை நாங்கள் இந்தத் தொடரில் எடுத்துச் செல்வோம்.
கடந்த முறை நாங்கள் இங்கே வந்தபோது தொடரை 0-1 எனத் தோற்றோம். தற்போது இருப்பது அதே அணியல்ல. தற்போது நாங்கள் முழுமையடைந்த அணியை பெற்றுள்ளோம். நியூசிலாந்து திறமையான பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், சிறந்த பீல்டர்களை கொண்ட அணி. அவர்கள் எளிதான ஆட்டத்தை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியான பயன்படுத்தி போட்டியை நம் பக்கம் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X