என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த வேண்டும்: மீண்டும் அணிக்கு திரும்பிய டிரென்ட் போல்ட் சொல்கிறார்
Byமாலை மலர்18 Feb 2020 10:58 AM GMT (Updated: 18 Feb 2020 10:58 AM GMT)
காயம் குணமாகி அணிக்கு திரும்பியுள்ள டிரென்ட் போல்ட், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட். இடது கை பவுலர் ஆன
இவர் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் விளையாடிய டிரென்ட் போல்டுக்கு கையில் முறிவு ஏற்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட டிரென்ட் போல்ட் உடற்தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவதற்காக காத்திருக்க முடியாது என்று முதல் டெஸ்டில் விளையாட இருக்கும் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறும்போது ‘‘தனிப்பட்ட முறையில் நான் போட்டியில் விளையாடும்போது விராட் கோலி போன்ற வீரர்களை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என விரும்புவேன். எனக்குள்ளே இப்படி ஒரு போட்டியை உருவாக்கிக் கொள்வேன். ஆகவே, விராட் கோலியை அவுட்டாக்குவதற்காக காத்திருக்க முடியாது.
ஆனால் அவர் தலைசிறந்த வீரர். அவர் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்’’ என்றார்.
இவர் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் விளையாடிய டிரென்ட் போல்டுக்கு கையில் முறிவு ஏற்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட டிரென்ட் போல்ட் உடற்தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவதற்காக காத்திருக்க முடியாது என்று முதல் டெஸ்டில் விளையாட இருக்கும் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறும்போது ‘‘தனிப்பட்ட முறையில் நான் போட்டியில் விளையாடும்போது விராட் கோலி போன்ற வீரர்களை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என விரும்புவேன். எனக்குள்ளே இப்படி ஒரு போட்டியை உருவாக்கிக் கொள்வேன். ஆகவே, விராட் கோலியை அவுட்டாக்குவதற்காக காத்திருக்க முடியாது.
ஆனால் அவர் தலைசிறந்த வீரர். அவர் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X