என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மயங்க் அகர்வாலுக்கு இடம்
Byமாலை மலர்4 Feb 2020 5:21 AM GMT (Updated: 4 Feb 2020 5:21 AM GMT)
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை:
இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி, ஹமில்டன் நகரில் நாளை (பிப்ரவரி 5ம் தேதி ) காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கிடையே கடந்த 3ம் தேதி நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா காரணமாக பேட்டிங் செய்யும் போது தசை பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை. தசை பிடிப்பு முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
‘நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஆடிய இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. ரோகித் சர்மா முழுமையாக குணமடையாததால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்’ என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
அதே போல் ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பிரித்வி ஷா மற்றும் சுப்மான் கில் ஆகியோரும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X