என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி டி20 போட்டி: நியூசிலாந்துக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா
Byமாலை மலர்2 Feb 2020 8:53 AM GMT (Updated: 2 Feb 2020 8:53 AM GMT)
ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப நியூசிலாந்துக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை. ஆகவே ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது. கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 35 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 45 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். கேஎல் ராகுல் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.3 ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்தது.
19 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் மணிஷ் பாண்டே. அதன்பின் நான்கு பந்தில் ஐந்து ரன்களே அடித்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே சேர்த்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 33 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 4 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது. கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 35 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 45 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். கேஎல் ராகுல் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.3 ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்தது.
ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருக்கும்போது காயம் காரணமாக வெளியேறினார். அப்போது இந்தியா 138 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் நியூசிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சாளர் இந்தியாவால் ரன்கள் குவிக்க இயலவில்லை. ஷிவம் டுபே 6 பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
19 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் மணிஷ் பாண்டே. அதன்பின் நான்கு பந்தில் ஐந்து ரன்களே அடித்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே சேர்த்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 33 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 4 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X