search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல் ரசாக்
    X
    அப்துல் ரசாக்

    ஐபிஎல் பெஸ்ட் லெவனை பாகிஸ்தான் பெஸ்ட் லெவன் அணியால் வீழ்த்த முடியும்: அப்துல் ரசாக்

    இந்தியன் பிரிமீயர் லீக்கின் சிறந்த லெவன் அணியை பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் சிறந்த லெவன் அணியால் வீழ்த்த முடியும் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008-ம் ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக் என்ற டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. உலகளவில் இந்தத் தொடருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து. இதில் விளையாடும் வீரர்களுக்கு அணிகள் ஏலம் மூலம் கோடிக்கணக்கில் பணம் வழங்குகிறது.

    இதனால் பெரும்பாலான சர்வதேச வீரர்கள் ஐபிஎல் லீக்கில் விளையாட விரும்புகிறார்கள். ஐபிஎல்-ஐ தொடர்ந்து மற்ற நாடுகளும் டி20 லீக்கை தொடங்கியது. ஆஸ்திரேலியா பிக் பாஷ், வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் என தொடங்கின.

    இந்நிலையில் இந்தியன் பிரிமீயர் லீக்கின் சிறந்த லெவன் அணியை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சிறந்த லெவன் அணியால் வீழ்த்த முடியும் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அப்துல் ரசாக் கூறுகையில் ‘‘இந்தியன் பிரிமீயர் லீக்கில் இருந்து சிறந்த வீரர்களை கொண்டு உருவாகும் அணியும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இருந்த சிறந்த வீரர்களை கொண்டு உருவாகும் அணியும் மோதினால், பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிதான் நிச்சயமாக வெற்றி பெறும்’’ என்றார்.

    ஏற்கனவே பும்ராவை பேபி பவுலர் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் அப்துல் ரசாக் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×