search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி
    X
    டோனி

    பிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை

    பிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முன்னாள் கேப்டன் டோனியின் பெயர் இடம்பெறவில்லை.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான (சீனியர் பிரிவு) வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் முன்னாள்  கேப்டன் மகேந்திர சிங் டோனி பெயர் இடம்பெறவில்லை. 

    கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொண்டனர். அதாவது இவர்கள் இருவரும் ஏ பிளஸ் பட்டியலில் நீடிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் பெறுவார்கள். 

    இந்திய அணி வீரர்கள்

    இதேபோல் ஏ கிரேடில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரகானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பன்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். 

    ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறும் பி கிரேடு பட்டியலில், விர்திமான் சகா, உமேஷ் யாதவ், உஸ்வேந்திர சாகல், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால் ஆகிய 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

    சி கிரேடு பட்டியலில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாகர், மணீஷ் பாண்டே, ஹனுமா  விகாரி, ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவார்கள். 

    கடந்த ஆண்டு வரை ஏ கிரேடு பட்டியலில் இருந்தார் டோனி. உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு டோனி விளையாடவில்லை. தற்போது அவரது ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால், அவரது எதிர்காலம் குறித்து புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. 
    Next Story
    ×