search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகானே
    X
    ரகானே

    அவர்களுக்காக விளையாட வேண்டும் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரும்பியது: ரகானே

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விரும்பியதால் அந்த அணிக்காக விளையாட இருக்கிறேன் என ரகானே தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ரகானே. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். அதில் துணைக் கேப்டனாக உள்ளார். ஐபிஎல் சீசனில் ரகானே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

    நீண்ட காலமாக அணிக்காக விளையாடி வந்த அவர், 2020 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியது ஏன் என்பது குறித்து ரகானே கூறுகையில் ‘‘எனது மனதில் அடுத்த அணிக்காக விளையாட வேண்டும் போன்ற எந்த சிந்தனையும் உதிக்கவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அவர்களுக்காக நான் விளையாட வேண்டும் என்று விரும்பியது.

    கற்றுக் கொள்ளவும், ஒரு வீரராக வளரவும் கிடைத்த வாய்ப்பு என்று எண்ணினேன். நீண்ட வருடமாக விளையாட வாய்ப்பு கொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி சொல்லியாக வேண்டும். 2019 சீசன் மத்தியில் நடந்த சம்பவங்கள் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

    கிரிக்கெட் எப்போதுமே டீம் ஸ்போர்ட் என்று நம்புகிறவன் நான். ஒரு வீரரின் தவறால் நீங்கள் தோல்வியடைய மாட்டீர்கள். அதேபோல், ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தால் வெற்றி பெற முடியாது. நீங்கள் என்னை குற்றம்சாட்ட நினைத்தால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பின்னர், என்னுடைய நெருக்கமான நண்பர்களிடம் உட்கார்ந்திருந்தேன். ஆனால், கேப்டன் பதவி குறித்து எந்த விஷயத்தையும் நான் பேசவில்லை. நான் எப்படி பேட்டிங் செய்யனும், செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்தேன். ஆக்ரோஷமான ஆட்டத்தை நேர்மறையாக சிந்தனையுடன் விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் களம் இறங்கினேன். அதனடிப்படையில் என்னுடைய ஆட்டம் வெளிப்பட்டது’’ என்றார்.
    Next Story
    ×