search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுரவ் கங்குலி
    X
    சவுரவ் கங்குலி

    ஐசிசி-க்கு பதிலடி கொடுக்க 4 நாடுகள் போட்டியை நடத்த இந்தியா திட்டம்

    இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்பட நான்கு நாடுகளுக்கு இடையிலான தொடரை நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டம் வகுத்துள்ளார்.
    பல நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்துகிறது. இந்த நிலையில் முன்னணி அணிகள் மோதும் ஒரு நாள் தொடரை 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தொடக்க நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    ஐசிசி அமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை குறைக்க ஏதுவாக ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் ஐசிசி-க்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் ஒரு நாள் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தீவிரம் காட்டியுள்ளார்.

    ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் அவர் 4 நாடுகள் போட்டியை நடத்த முடிவு செய்கிறார்.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் 4-வது அணியை கொண்ட 2021-ம் ஆண்டு இந்தப் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி 3 நாடுகள் மத்தியில் சுழற்சி முறையில் நடத்தப்படும். இதன் மூலம் 3 வாரியங்களுக்கும் நிதியாதாரம் பெருகும்.
    Next Story
    ×