என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐசிசி-க்கு பதிலடி கொடுக்க 4 நாடுகள் போட்டியை நடத்த இந்தியா திட்டம்
Byமாலை மலர்25 Dec 2019 8:31 AM GMT (Updated: 25 Dec 2019 8:31 AM GMT)
இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்பட நான்கு நாடுகளுக்கு இடையிலான தொடரை நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டம் வகுத்துள்ளார்.
பல நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்துகிறது. இந்த நிலையில் முன்னணி அணிகள் மோதும் ஒரு நாள் தொடரை 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தொடக்க நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஐசிசி அமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை குறைக்க ஏதுவாக ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த நிலையில் ஐசிசி-க்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் ஒரு நாள் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தீவிரம் காட்டியுள்ளார்.
ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் அவர் 4 நாடுகள் போட்டியை நடத்த முடிவு செய்கிறார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் 4-வது அணியை கொண்ட 2021-ம் ஆண்டு இந்தப் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி 3 நாடுகள் மத்தியில் சுழற்சி முறையில் நடத்தப்படும். இதன் மூலம் 3 வாரியங்களுக்கும் நிதியாதாரம் பெருகும்.
ஐசிசி அமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை குறைக்க ஏதுவாக ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த நிலையில் ஐசிசி-க்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் ஒரு நாள் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தீவிரம் காட்டியுள்ளார்.
ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் அவர் 4 நாடுகள் போட்டியை நடத்த முடிவு செய்கிறார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் 4-வது அணியை கொண்ட 2021-ம் ஆண்டு இந்தப் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி 3 நாடுகள் மத்தியில் சுழற்சி முறையில் நடத்தப்படும். இதன் மூலம் 3 வாரியங்களுக்கும் நிதியாதாரம் பெருகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X