என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 உலகக்கோப்பைக்கு 360 டிகிரி-யை அழைத்து வர தென்ஆப்பிரிக்கா முயற்சி
Byமாலை மலர்15 Dec 2019 9:29 AM GMT (Updated: 15 Dec 2019 9:29 AM GMT)
ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் ஏபி டிவில்லியர்ஸ்-ஐ விளையாட வைக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு முயற்சி செய்து வருகிறது.
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். 360 டிகிரி என்று அழைக்கப்படும் அவர், இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்.
மேலும் ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்றோர் ஓய்வு பெற்றதால் அந்த அணி திணறியது. தற்போது அணியை சீரமைக்கும் வேலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தீவிரம் காட்டி வருகிறது.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனராக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் முதல் இலக்கே அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு சிறந்த அணியை தயார் செய்வதே ஆகும்.
முதற்கட்டமாக ஏபி டி வில்லியர்ஸ்-ஐ மீண்டும் டி20 சர்வதேச அணிக்கு அழைத்து வர முயற்சி செய்கிறது. இதுகுறித்து அவரிடம் பேசுவேன் என்று மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் ‘‘நீங்கள் உலகக்கோப்பை தொடருக்கு செல்லும்போது, தலைசிறந்த வீரர்களுடன் விளையாட விரும்புவீர்கள். ஏபி டி வில்லியர்ஸ் சிறந்த வீரர்களில் ஒருவர் என நான் உணர்ந்தால், அவருடம் பேசி மீண்டும் அணிக்கு திரும்ப ஏன் அழைக்கக் கூடாது? ’’ என்றார்.
இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரில் விளையாட ஏபி டி வில்லியர்ஸ் தயாராக இருந்து நிலையில், தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்றோர் ஓய்வு பெற்றதால் அந்த அணி திணறியது. தற்போது அணியை சீரமைக்கும் வேலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தீவிரம் காட்டி வருகிறது.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனராக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் முதல் இலக்கே அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு சிறந்த அணியை தயார் செய்வதே ஆகும்.
முதற்கட்டமாக ஏபி டி வில்லியர்ஸ்-ஐ மீண்டும் டி20 சர்வதேச அணிக்கு அழைத்து வர முயற்சி செய்கிறது. இதுகுறித்து அவரிடம் பேசுவேன் என்று மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் ‘‘நீங்கள் உலகக்கோப்பை தொடருக்கு செல்லும்போது, தலைசிறந்த வீரர்களுடன் விளையாட விரும்புவீர்கள். ஏபி டி வில்லியர்ஸ் சிறந்த வீரர்களில் ஒருவர் என நான் உணர்ந்தால், அவருடம் பேசி மீண்டும் அணிக்கு திரும்ப ஏன் அழைக்கக் கூடாது? ’’ என்றார்.
இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரில் விளையாட ஏபி டி வில்லியர்ஸ் தயாராக இருந்து நிலையில், தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X