search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த மகிழ்ச்சியில் சென்னை வீரர்கள்
    X
    கோல் அடித்த மகிழ்ச்சியில் சென்னை வீரர்கள்

    ஐஎஸ்எல் கால்பந்து - கடைசி கட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அடித்த கோலால் சென்னையுடனான ஆட்டம் சமன்

    ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கடைசி கட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அடித்த கோலால் சென்னையுடனான ஆட்டம் சமனானது
    ஜாம்ஷெட்பூர்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 26வது நிமிடத்தில் சென்னை அணியின் வர்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியிலும் சென்னை வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். சென்னை அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஐசக் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சமனில் முடிந்தது.

    இதன்மூலம், ஜாம்ஷெட்பூர் அணி தான் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 டிரா மற்றும் ஒரு தோல்வி என 12 புள்ளிகள் பெற்று4வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 1 வெற்றி, 3 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 6 புள்ளிகள் பெற்றது.
    Next Story
    ×