search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னையின் எப்.சி"

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-3 என்ற கோல் கணக்கில் அபாகானி லிமிடெட் டாக்கா அணியிடம் தோல்வி கண்டது.
    டாக்கா:

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல குரூப் (இ பிரிவு) சுற்றில் வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அபாகானி லிமிடெட் டாக்கா (வங்காளதேசம்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-3 என்ற கோல் கணக்கில் அபாகானி லிமிடெட் டாக்கா அணியிடம் தோல்வி கண்டது. வங்காளதேச அணியில் கெர்வென்ஸ் பெல்போர்ட் 64-வது நிமிடத்திலும், மாசிக் சைஹானி 69-வது நிமிடத்திலும், மாமனுல் இஸ்லாம் 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சென்னையின் எப்.சி. அணியில் வினீத் 6-வது நிமிடத்திலும், ஐசக் வன்மால்சாவ் 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்கள். சென்னையின் எப்.சி. அணி தனது அடுத்த ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கவுகாத்தியில் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது.

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனேவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி. அணி. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தனர்.

    ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4- 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #ChennaiyinFC
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியின் மடாவ் சுகோவ் முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதி முடிவில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1- 0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி எப்.சி. அணி மூன்றாவது வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #ChennaiyinFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் நிதானமாக ஆடின. கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை இரண்டு அணியினரும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

    இறுதியில், சென்னையின் எப்.சி. அணிக்கும், டெல்லி டைனமோஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் சமனிலையில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 4-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, நார்த் ஈஸ்ட் பைபிள் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரவ்லின்  பார்கெஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, தாய் சிங் 15 மற்றும் 32-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்தார்.

    நார்த் ஈஸ்ட் அணி சார்பில் பர்த்தலோமியூ 29, 37, 39-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியினர் 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தனர்.

    இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, எப்.சி. கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53-வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80-வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 - 0 என முன்னேறியது. 
     
    கடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தது. #ISL2018 #ChennaiyinFC #FCGoa
    ×