என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்ச்சர் மீது இனவெறி - வில்லியம்சன் மன்னிப்பு கேட்டார்
Byமாலை மலர்27 Nov 2019 7:44 AM GMT (Updated: 27 Nov 2019 7:44 AM GMT)
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியதாக எழுந்த புகாருக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஹேமில்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடரை இங்கிலாந்து அணி 3&2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை இனவெறி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ச்சர் பேட்டிங் செய்து விட்டு பெவிலியன் திரும்பிய போது இனவெறி சர்ச்சையை சந்தித்துள்ளார். வெஸ்ட்இண்டீசை பூர்வீகமாக கொண்ட அவருக்கு எதிராக ரசிகர் ஒருவர் ஆர்ச்சரின் நிறம் குறித்து கேலி செய்துள்ளார்.
இனவெறி விவகாரத்தால் ஆர்ச்சரிடம், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆர்ச்சர் மீதான இனவெறி சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. பலவிதமான கலாச்சாரத்தை பின்பற்றும் மக்கள் நியூசிலாந்தில் வாழ்கிறார்கள். எங்கள் மண்ணில் நடந்த இனவெறி பிரச்சினைக்காக ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் இது தொடர்பாக கூறியதாவது:-
ஆர்ச்சர் மீதான இனவெறி தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய ரசிகரை கண்டுபிடிக்க போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மைதானத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அந்த ரசிகரை கண்டுபிடித்து விடுவோம். அவரை இனிமேல் மைதானத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்.
ஹேமில்டனில் வருகிற 29-ந் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடரை இங்கிலாந்து அணி 3&2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை இனவெறி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ச்சர் பேட்டிங் செய்து விட்டு பெவிலியன் திரும்பிய போது இனவெறி சர்ச்சையை சந்தித்துள்ளார். வெஸ்ட்இண்டீசை பூர்வீகமாக கொண்ட அவருக்கு எதிராக ரசிகர் ஒருவர் ஆர்ச்சரின் நிறம் குறித்து கேலி செய்துள்ளார்.
இனவெறி விவகாரத்தால் ஆர்ச்சரிடம், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆர்ச்சர் மீதான இனவெறி சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. பலவிதமான கலாச்சாரத்தை பின்பற்றும் மக்கள் நியூசிலாந்தில் வாழ்கிறார்கள். எங்கள் மண்ணில் நடந்த இனவெறி பிரச்சினைக்காக ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் இது தொடர்பாக கூறியதாவது:-
ஆர்ச்சர் மீதான இனவெறி தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய ரசிகரை கண்டுபிடிக்க போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மைதானத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அந்த ரசிகரை கண்டுபிடித்து விடுவோம். அவரை இனிமேல் மைதானத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்.
ஹேமில்டனில் வருகிற 29-ந் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X