என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம்
Byமாலை மலர்11 Nov 2019 1:22 PM GMT (Updated: 11 Nov 2019 1:22 PM GMT)
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம் விளாசினர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. அடிலெய்டில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக பாகிஸ்தான் பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பயிற்சி ஆட்டம் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஷான் மசூத், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மசூத் 22 ரன்னிலும், அசார் அலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் 18 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
60 ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்திருந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போன்று அதிரடி காட்டினார். இரண்டு பேரும் அடுத்தடுத்து சதம் அடித்தனர். இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்கவில்லை.
பாகிஸ்தான் 90 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்துள்ளது. ஆசாத் ஷபிக் 119 ரன்னுடனும், பாபர் அசாம் 157 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. அடிலெய்டில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக பாகிஸ்தான் பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பயிற்சி ஆட்டம் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஷான் மசூத், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மசூத் 22 ரன்னிலும், அசார் அலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் 18 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
60 ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்திருந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போன்று அதிரடி காட்டினார். இரண்டு பேரும் அடுத்தடுத்து சதம் அடித்தனர். இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்கவில்லை.
பாகிஸ்தான் 90 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்துள்ளது. ஆசாத் ஷபிக் 119 ரன்னுடனும், பாபர் அசாம் 157 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X