என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யாருடன் போட்டி என்பது பிரச்சினை அல்ல: சகா சொல்கிறார்
Byமாலை மலர்6 Nov 2019 10:59 AM GMT (Updated: 6 Nov 2019 10:59 AM GMT)
எம்எஸ் டோனியுடன் போட்டியா?, ரிஷப் பந்துடன் போட்டியோ? என்பது பிரச்சினை அல்ல. போட்டிக்கு தயாராக இருப்பதுதான் முக்கியம் என சகா தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட சகா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுமார் ஓராண்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சமயத்தில் ரிஷப் பந்த் டெஸ்ட் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆனார். ரிஷப் பந்த் வருகையால் சகாவின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.
இந்த சமயத்தில்தான் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சகா தேர்வு செய்யப்பட்டார். சிறப்பான விக்கெட் கீப்பர் பணியால் அனைவரது மனதையும் ஈர்த்தார்.
இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் கிடைக்கும் என சகா நம்பிக்கையில் உள்ளார்.
எம்எஸ் டோனி அணியில் இருந்ததால் சுமார் ஓராண்டுகளுக்கு மேலாக விளையாட வாய்ப்பில்லாமல் இருந்த சகா, தனது இடத்தை ரிஷப் பந்திடம் இழந்து மீண்டும் பெற்றுள்ள நிலையில், யாருடன் போட்டி என்பது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘போட்டி டோனிக்கு எதிராகவா அல்லது ரிஷப் பந்துக்கு எதிராகவா என்பது பெரிய விஷயம் அல்ல. போட்டியை எப்படி அணுகுகிறேனோ, அதேபோல் பயிற்சியை அணுகுகிறேன். நான் என்னை எப்போதுமே வர இருக்கிற போட்டிக்கு ஏற்ப தயார் படுத்திக் கொள்வேன்.
என்னுடைய கவனம் யாருடன் போட்டியிட்டு அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அணித்தேர்வு உள்பட மற்ற விஷயங்கள் என்னுடைய கையில் இல்லை’’ என்றார்.
இந்த சமயத்தில் ரிஷப் பந்த் டெஸ்ட் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆனார். ரிஷப் பந்த் வருகையால் சகாவின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.
இந்த சமயத்தில்தான் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சகா தேர்வு செய்யப்பட்டார். சிறப்பான விக்கெட் கீப்பர் பணியால் அனைவரது மனதையும் ஈர்த்தார்.
இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் கிடைக்கும் என சகா நம்பிக்கையில் உள்ளார்.
எம்எஸ் டோனி அணியில் இருந்ததால் சுமார் ஓராண்டுகளுக்கு மேலாக விளையாட வாய்ப்பில்லாமல் இருந்த சகா, தனது இடத்தை ரிஷப் பந்திடம் இழந்து மீண்டும் பெற்றுள்ள நிலையில், யாருடன் போட்டி என்பது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘போட்டி டோனிக்கு எதிராகவா அல்லது ரிஷப் பந்துக்கு எதிராகவா என்பது பெரிய விஷயம் அல்ல. போட்டியை எப்படி அணுகுகிறேனோ, அதேபோல் பயிற்சியை அணுகுகிறேன். நான் என்னை எப்போதுமே வர இருக்கிற போட்டிக்கு ஏற்ப தயார் படுத்திக் கொள்வேன்.
என்னுடைய கவனம் யாருடன் போட்டியிட்டு அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அணித்தேர்வு உள்பட மற்ற விஷயங்கள் என்னுடைய கையில் இல்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X