என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேதார் ஜாதவ், நதீம் அபாரம் - தியோதர் டிராபியை கைப்பற்றி அசத்தியது இந்தியா 'பி'
Byமாலை மலர்4 Nov 2019 1:02 PM GMT (Updated: 4 Nov 2019 1:02 PM GMT)
கேதார் ஜாதவ், ஜெயிஸ்வால் ஆகியோரின் அரை சதம் மற்றும் ஷாபாஸ் நதீமின் அபார பந்து வீச்சால் இந்தியா பி அணி தியோதர் டிராபியை கைப்பற்றி அசத்தியது.
ராஞ்சி:
இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் தியோதர் டிராபி தொடரின் இறுதிப் போட்டி ஜார்க்கண்டில் இன்று நடைபெற்றது.
ராஞ்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி்’ மற்றும் இந்தியா ‘சி’ அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை. அடுத்து இறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 54 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து இறங்கிய கேதார் ஜாதவ் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 86 ரன்னில் வெளியேறினார். விஜய் சங்கர் 45 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய கவுதம் கிருஷ்ணப்பா 10 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், இந்தியா பி அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது.
இந்தியா சி சார்பில் இஷான் போரல் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரியம் கார்க் 74 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 38 ரன்னும், ஜலாஜ் சக்சேனா 37 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இந்தியா சி அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா பி அணி சார்பில் ஷாபஸ் நதீம் 4 விக்கெட்டும், மொகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்தியா பி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தியோதர் டிராபியை கைப்பற்றி அசத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X