என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனம் புண்படுவதாக அனுஷ்கா சர்மா உணர்ந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பரூக் என்ஜினீயர்
Byமாலை மலர்1 Nov 2019 11:29 AM GMT (Updated: 1 Nov 2019 11:29 AM GMT)
நான் வேடிக்கையாக கூறிய கருத்தை பெரிதாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர் என பரூப் என்ஜினீயர் அனுஷ்கா சர்மா குறித்த கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர். இவர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ‘‘இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு தேனீர் வாங்கி கொடுக்கும் வேலையை பார்த்தனர்’’ என்று கூறினார். அத்துடன் தேர்வுக்குழுவை கடுமையாக சாடினார்.
ஆனால், அனுஷ்கா சர்மாவுக்கு தேர்வுக்குழு உறுப்பினர் தேனீர் கோப்பை சுமந்ததாக வெளியான செய்தி கடும் விமர்சனத்தை எழுப்பியது. இந்த விமர்சனத்திற்கு அனுஷ்கா சர்மா நீண்ட கடிதம் மூலம் விளக்கம் அளித்து, கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நான் வேடிக்கையாக கூறிய கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. மனம் புண்படுவதாக அனுஷ்கா சர்மா உணர்ந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பரூக் என்ஜினீயரிங் தனது விளக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பரூப் என்ஜினீயர் தனது விளக்க உரையில் ‘‘நான் பேசிய கருத்து உண்மைதான். ஆனால் நான் அனுஷ்கா சர்மாவை விமர்சனம் செய்யவில்லை. அவர் மிகவும் அன்பான, அழகான பெண். அவர் நல்ல மனிதர். அவரும், விராட் கோலியும் ரோல் மாடலாக உள்ளனர். நான் அவருக்கு எதிரானவர் அல்ல.
புண்படுவதாக அவர் உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மிகவம் மோசமானதாக உணர்ந்தால், அதற்காக வருந்துகிறேன். தேர்வாளர்கள் அவர்களுடைய வேலையை சரியாக செய்யாததால், கடுமையாக விமர்சனம் செய்தேன். அனுஷ்கா சர்மா அல்லது விராட் கோலிக்கு எதிராக ஏதும் இல்லை.
நான் வேடிக்கையாக சொன்ன ஒரு சிறிய கருத்து மிகப்பெரிய அளவில் மிகைப்படுத்தி விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
ஆனால், அனுஷ்கா சர்மாவுக்கு தேர்வுக்குழு உறுப்பினர் தேனீர் கோப்பை சுமந்ததாக வெளியான செய்தி கடும் விமர்சனத்தை எழுப்பியது. இந்த விமர்சனத்திற்கு அனுஷ்கா சர்மா நீண்ட கடிதம் மூலம் விளக்கம் அளித்து, கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நான் வேடிக்கையாக கூறிய கருத்து பெரிதாக்கப்பட்டுள்ளது. மனம் புண்படுவதாக அனுஷ்கா சர்மா உணர்ந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பரூக் என்ஜினீயரிங் தனது விளக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பரூப் என்ஜினீயர் தனது விளக்க உரையில் ‘‘நான் பேசிய கருத்து உண்மைதான். ஆனால் நான் அனுஷ்கா சர்மாவை விமர்சனம் செய்யவில்லை. அவர் மிகவும் அன்பான, அழகான பெண். அவர் நல்ல மனிதர். அவரும், விராட் கோலியும் ரோல் மாடலாக உள்ளனர். நான் அவருக்கு எதிரானவர் அல்ல.
புண்படுவதாக அவர் உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மிகவம் மோசமானதாக உணர்ந்தால், அதற்காக வருந்துகிறேன். தேர்வாளர்கள் அவர்களுடைய வேலையை சரியாக செய்யாததால், கடுமையாக விமர்சனம் செய்தேன். அனுஷ்கா சர்மா அல்லது விராட் கோலிக்கு எதிராக ஏதும் இல்லை.
நான் வேடிக்கையாக சொன்ன ஒரு சிறிய கருத்து மிகப்பெரிய அளவில் மிகைப்படுத்தி விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X