search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாஸ்க் அணிந்து பயிற்சியில் ஈடுபட்ட வங்காளதேச வீரர்கள்
    X
    மாஸ்க் அணிந்து பயிற்சியில் ஈடுபட்ட வங்காளதேச வீரர்கள்

    வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி

    டெல்லியில் காற்று மாசு அளவுக்கு அதிகமாக உள்ளதால் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
    இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி  மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், திட்டமிட்டபடி முதல் 20 ஓவர் போட்டி டெல்லியில்தான் நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி  நேற்று தெரிவித்தார்.

    வங்காளதேச வீரர்

    இதையடுத்து, இருநாட்டு வீரர்களும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக, வங்காளதேச வீரர்கள் சிலர் மாஸ்க் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×