என் மலர்
செய்திகள்

பகல் இரவு டெஸ்ட்
கொல்கத்தாவில் பகல் - இரவு டெஸ்ட்: விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு
முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படுவதால், ஆட்டத்தை பார்க்க பிரபலமான வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இப்போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி முயற்சியால் பகல்-இரவு போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு முக்கிய பிரமுகர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி முயற்சியால் பகல்-இரவு போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு முக்கிய பிரமுகர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதல்நாள் ஆட்டத்தை நேரில் காண வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா வருகிறார். பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜெக்தீப் தன்கார், கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோரும் போட்டியை நேரில் காண அழைக்கப்பட்டுள்ளனர்.
Next Story






