search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுஷ்கா சர்மா
    X
    அனுஷ்கா சர்மா

    என்னை விட்டு விடுங்கள்: ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் அனுஷ்கா சர்மா காட்டமான பதிலடி

    முன்னாள் கிரிக்கெட் வீரர் பரூக் என்ஜீனியர் விமர்சனத்திற்கு விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா காட்டமான வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.
    எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு மீது சமீப காலமாக விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அவர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறன.

    அவர்களை பற்றி விமர்சனம் எழுப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பரூக் என்ஜினீயர், ‘‘இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது தேர்வுக்குழுவினர் கேப்டன் விராட் கோலிக்கு தேனீர் வாங்கிக் கொடுத்தனர். அதை நான் பார்த்தேன்’’ என்று கூறினார்.

    பரூக் என்ஜினீயரின் இந்த கருத்துக்கு ஆனுஷ்கா சர்மா கடும் காட்டமான வகையில் நீண்ட கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.

    அவர் தனது கடிதத்தில் ‘‘நான் உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியை நேரில் சென்று பார்த்தேன். அப்போது ஃபேமிலி பாக்ஸில் உட்கார்ந்து போட்டியை பார்த்தேன். தேர்வாளர்கள் இருக்கும் பகுதியில் நான் இருக்கவில்லை.

    இப்படி இருக்கும்போது, நீங்கள் உண்மையான செய்தியை சொல்ல விரும்பினால் அதைபற்றி சொல்லுங்கள். தேர்வுக்குழு மற்றும் அவர்களின் தகுதி பற்றி பேச விரும்பினால், உங்களுடைய தனிப்பட்ட கருத்தை நீங்கள் கூறலாம். ஆனால், என்னுடைய பெயரை உள்ளே இழுத்து விடக்கூடாது. இதுபோன்ற விஷயத்தில் என்னுடைய பெயரை பயன்படுத்த நான் அனுமதிக்கமாட்டேன்.

    நான் விராட் கோலியின் காதலியாக இருக்கும்போதும், தற்போது மனைவியாக இருக்கும்போதும் நான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறேன். அப்போதெல்லாம் நான் அமைதியாக இருந்தேன்.

    என்னுடைய பாதுகாப்பு மற்றும் டிக்கெட் விஷயத்தில் கிரிக்கெட் போர்டு உடன் என்னை இணைத்து பேசுகிறார்கள். உண்மை என்னவென்றால், விமானம் மற்றும் போட்டி ஆகியவற்றிற்கான டிக்கெட் என்னுடைய சொந்த பணத்தில் வாங்கியது. இதில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன்.

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் நான் இருந்ததை பற்றி விமர்சனம் செய்தார்கள். தூதர அதிகாரியின் மனைவி கேட்டுக்கொண்டதனால்தான் நான் அதில்  கலந்து கொண்டேன். அப்போது கூட எனக்கு சற்று தயக்கம் இருந்தது. இது மிகப்பெரிய விமர்சனமாக எழுந்தது. என்னை விருந்துக்கு முறைப்படி அழைத்திருந்தார்கள். என்றாலும், நானாகவே காலந்து  கொண்டதாக கூறினார்கள். அப்போதும் அமைதியாக இருந்தேன்.

    தற்போது இதுபோன்ற செய்திகள் என்னை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் என்னுடைய அமைதியை முறித்திக் கொண்டு பதில் அளிக்க முடிவு செய்தேன்.

    அனுஷ்கா சர்மா

    ஒருவருடைய அமைதியை பலவீனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால்தான் தற்போது பேசியுள்ளேன்.  உண்மையான ஆதாரம் இல்லாமல்  எந்தவொரு மனிதரோ, கிரிக்கெட் போர்டோ, அல்லது எனது கணவரோ எனது பெயரை தேவையில்லாமல் இழுத்து பேசக்கூடாது. என்னை விட்டுவிடுங்கள்.

    நான் என்னுடைய சொந்த கேரியர் மூலம் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். இந்த விஷயத்தில் நான் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது’’ என்றார்.
    Next Story
    ×