என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிரணிக்கு அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை
Byமாலை மலர்21 Oct 2019 9:51 AM GMT (Updated: 21 Oct 2019 9:51 AM GMT)
ராஞ்சி டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி பாலோ-ஆன் கொடுத்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்ய விரும்பாமல் தென்ஆப்பிரிக்காவை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதன்மூலம் 8-வது முறையாக எதிரணியை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது. இதனால் அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முகமது அசாருதீன் 7 முறையும், எம்எஸ் டோனி 5 முறையும், கங்குலி நான்கு முறையும் பாலோ-ஆன் கொடுத்துள்ளனர்.
1993-94-ல் இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு முறை (லக்னோ மற்றும் பெங்களூரு) பாலோ-ஆன் கொடுத்தது. அதன்பின் தற்போதுதான் இரண்டு முறை பாலோ-ஆன் கொடுத்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 8-வது முறையாக பாலோ-ஆன் கொடுத்த நிலையில், 7 முறை வெற்றியும், இரண்டு முறை டிராவும் கண்டுள்ளது. பாலே-ஆன் கொடுக்காமல் இந்தியா பேட்டிங் செய்த 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்ய விரும்பாமல் தென்ஆப்பிரிக்காவை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதன்மூலம் 8-வது முறையாக எதிரணியை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய பணித்தது. இதனால் அதிக முறை பாலோ-ஆன் கொடுத்த இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முகமது அசாருதீன் 7 முறையும், எம்எஸ் டோனி 5 முறையும், கங்குலி நான்கு முறையும் பாலோ-ஆன் கொடுத்துள்ளனர்.
1993-94-ல் இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு முறை (லக்னோ மற்றும் பெங்களூரு) பாலோ-ஆன் கொடுத்தது. அதன்பின் தற்போதுதான் இரண்டு முறை பாலோ-ஆன் கொடுத்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 8-வது முறையாக பாலோ-ஆன் கொடுத்த நிலையில், 7 முறை வெற்றியும், இரண்டு முறை டிராவும் கண்டுள்ளது. பாலே-ஆன் கொடுக்காமல் இந்தியா பேட்டிங் செய்த 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X