என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ்
Byமாலை மலர்19 Oct 2019 3:44 PM GMT (Updated: 19 Oct 2019 4:48 PM GMT)
குஜராத்தில் நடைபெற்ற புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்கால் வாரியர்ஸ்.
அகமதாபாத்:
புரோ கபடி லீக்கின் 7வது தொடரின் இறுதிப்போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தனர். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமனிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியில் தபாங் டெல்லி அணியினர் தொடர்ந்து புள்ளிகளை எடுத்தனர். ஆனாலும் அவர்களால் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெற்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X