என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக்: மும்பையை போராடி வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் இறுதிக்கு முன்னேறியது
Byமாலை மலர்16 Oct 2019 4:41 PM GMT (Updated: 16 Oct 2019 4:41 PM GMT)
குஜராத்தில் நடைபெற்ற புரோ கப்டி லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் யு மும்பா அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
புரோ கபடி லீக் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டி குஜராத்தில் இன்று நடைபெற்றது. இதில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் அந்த அணி முதல் பாதியில் 18-12 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் யு மும்பா அணி வீரர்கள் புள்ளிகளை எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் மும்பை அணி வீரர்களின் போராட்டம் வீணானது.
இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 37-35 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X