search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புள்ளி எடுக்க போராடும் அணியினர்
    X
    புள்ளி எடுக்க போராடும் அணியினர்

    புரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது யுபி யோதா

    புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை வீழ்த்திய யுபி யோதா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யுபி யோதா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் யுபி யோதா அணி சிறப்பாக ஆடியது.  தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. 

    ஆட்டத்தின் முதல் பாதியில் யுபி யோதா அணி 22- 12 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் யுபி யோதா பொறுப்புடன் ஆடினர்.  

    இறுதியில், 50-33 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது யுபி யோதா அணி. இந்த வெற்றி மூலம் யுபி யோதா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    19-வது ஆட்டத்தில் ஆடிய யுபி யோதா அணி பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    மற்றொரு போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்சை 39-33 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது பாட்னா பைரேட்ஸ் அணி.
    Next Story
    ×