என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக்: தபாங் டெல்லியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது யுபி யோதா
Byமாலை மலர்5 Oct 2019 4:50 PM GMT (Updated: 5 Oct 2019 4:50 PM GMT)
புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை வீழ்த்திய யுபி யோதா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யுபி யோதா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் யுபி யோதா அணி சிறப்பாக ஆடியது. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன.
ஆட்டத்தின் முதல் பாதியில் யுபி யோதா அணி 22- 12 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் யுபி யோதா பொறுப்புடன் ஆடினர்.
இறுதியில், 50-33 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது யுபி யோதா அணி. இந்த வெற்றி மூலம் யுபி யோதா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
19-வது ஆட்டத்தில் ஆடிய யுபி யோதா அணி பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மற்றொரு போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்சை 39-33 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது பாட்னா பைரேட்ஸ் அணி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X