search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎல் ராகுல், பும்ரா
    X
    கேஎல் ராகுல், பும்ரா

    பும்ரா தனித்துவமான திறமையுடையவர்: இனிமேல் வளர மட்டும்தான் வேண்டும்- கேஎல் ராகுல்

    பும்ரா தனித்துவமான திறமைப் படைத்தவர், அவர் இனிமேல் புகழ்பெற்ற வீரராக வளர மட்டும்தான் வேண்டும் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. தற்போது முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள லேசான எழும்பு முறிவு காயத்தால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இடம் பெறவில்லை. இவருடன் இணைந்து விளையாடியவர் லோகேஷ் ராகுல். இவருக்கு தென்ஆப்பிரிக்கா தொடரில் இடம் கிடைக்கவில்லை.

    விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி வரும் கேஎல் ராகுல், பும்ராவின் திறமையை வெகுவாக பாராட்டியுள்ளார். பும்ரா குறித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘பும்ரா தனித்துவமான திறமை பெற்றவர். இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பே, அவருடன் விளையாடும் வாய்பு எனக்கு கிடைத்தது.

    ஜூனியர் லெவல் அணியில் விளையாடியுள்ளோம். கிரிக்கெட்டைப் பற்றி மிகவும் பேரார்வம் கொண்டவர். அவருடன் யாரும் மோதிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஏனெனில், அதிபயங்கரமாக பந்து வீசி அச்சுறுத்துவார். ஒருவருக்கொருவர் எதிரெதிராக விளையாடும்போது, போட்டிக்கு வெளியில் கூட அவர் போட்டியாளராக விளங்கினார்.

    அவரை போன்ற வீரர்கள் நாட்டிற்காக விளையாடும்போது கருணை காட்ட மாட்டார்கள். அவர் எப்போதும் போட்டியாளர்தான். அவர் தற்போது நாட்டிற்காக அந்த வகையில் விளையாடி வருவது சிறப்பாக விஷயம். அவர் இன்னும் சிறந்த வீரராக வளர மட்டுமே வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×