search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள்
    X
    வெற்றி கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள்

    இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    கராச்சி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கராச்சி மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

    பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.4 ஓவரில் 73 ரன்கள் சேர்த்தது. இமாம் உல் ஹக் 31 ரன்னிலும், பகர் ஜமான் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த துணைக் கேப்டன் பாபர் அசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த நாட்டில் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய அவர், 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்தார்.

    சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்

    ஹரிஸ் சோஹைல் 48 பந்தில் 40 ரன்களும், இப்திகார் அகமது 20 பந்தில் 32 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து 306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா மற்றும் சமர விக்ரமா களம் இறங்கினர்.  இருவரும் இணைந்து நிதானமாக ரன்களை குவிக்க தொடங்கிய நிலையில் ஆட்டத்தின் 3.6வது ஓவரில் சமர விக்ரமா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளள முடியாமல் இலங்கை அணி வீரர்கள் குணதிலகா (14), அவிஷ்கா பெர்னாண்டோ (0), திரிமானே (0), பெர்னாண்டோ  (1) தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.  

    இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜெயசூர்யா,   ‌ஷனகா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  இருவரும் இணைந்து அணியின் ரன் விகிதத்தை உயர்த்திய நிலையில் ஆட்டத்தின் 40.5வது ஓவரில் ஜெயசூர்யா 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உஷ்மான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.  இதனை தொடர்ந்து  ‌ஷனகா (68) ரன்களில் ஆட்டம் இழந்தார்.  இதனையிடைய பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்து வீச்சில் நிலைத்து நின்று விளையாட முடியாத நிலையில் இசுரு உதனா (1), லகிரு குமாரா (1), ஹசரங்கா (30) என தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் இலங்கை அணிவீரர் நுவன் பிரதீப் களத்தில் இருந்தார்.

    இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  பாகிஸ்தான் அணி தரப்பில் உஷ்மான் 5 விக்கெட்களையும், கான் 2 விக்கெட்களையும், அமிர், வாசிம், ரியாஷ் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர். 
    Next Story
    ×