search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக வீரர்களின் போராட்டம் வீண் - பெங்கால் அணி திரில் வெற்றி
    X

    ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக வீரர்களின் போராட்டம் வீண் - பெங்கால் அணி திரில் வெற்றி

    ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. #RanjiTrophy #Bengal #TamilNadu
    சென்னை:

    ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான லீக் (பி பிரிவு) ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் தமிழகம் 263 ரன்களும், பெங்கால் 189 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 141 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 216 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தமிழக பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அந்த அணி 150 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி கட்டத்தில் சட்டர்ஜீயும், பிரதிப்தா பிரமானிக்கும் மனஉறுதியுடன் போராடினர். சட்டர்ஜீ 40 ரன்னிலும், அடுத்து வந்த அசோக் திண்டா ஒரு ரன்னிலும் வெளியேறினர். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 10-வது விக்கெட்டுக்கு இறங்கிய இஷான் போரெலுக்கு, ரஹில் ஷாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு தமிழக வீரர்கள் முறையிட்டனர். நடுவர் வழங்க மறுத்தார். அதற்குள் அவர்கள் ஒரு ரன் ஓடி எடுத்தனர். முடிவில் பெங்கால் அணி 82.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. பிரமானிக் 25 ரன்களுடன் (97 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா 5 விக்கெட்டுகளை அறுவடை செய்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.   #RanjiTrophy #Bengal #TamilNadu
    Next Story
    ×