search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் - காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    டிஎன்பிஎல் - காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 22-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி எஸ் கார்த்திக், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கோபிநாத் களம் இறங்கினார்.  எஸ் கார்த்திக் - கோபிநாத் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் 11.1 ஓவரில் 110 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கோபிநாத் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய எஸ் கார்த்தி 44 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இவர் அவுட்டாகும்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் வந்த உதிரசாமி சசிதேவ் 11 ரன்னிலும், ஸ்ரீஹரிஸ்குமார் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முருகன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 34 ரன்கள் விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய காஞ்சி அணி முதலில் அதிரடியாக விளையாடியது. விஷால் வைத்யா 24 ரன்களிலும், அருண் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து, சேப்பாக் பவுலர்களின் கை ஓங்கியது. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தன.

    20 ஓவர்கள் முடிவில் காஞ்சி அணி 167 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து ஆட்டமிழந்தது. 
    Next Story
    ×