search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்சி வீரர் ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டுக்கு வாங்க தயாராகும் ரியல் மாட்ரிட்
    X

    செல்சி வீரர் ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டுக்கு வாங்க தயாராகும் ரியல் மாட்ரிட்

    ரொனால்டோ வெளியேறியதால் ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்க ரியல் மாட்ரிட் தயாராகி வருகிறது. #Realmadrid #Hazard
    போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 33) உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக லா லிகா ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது சம்பள பிரச்சனை காரணமாக ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி, இத்தாலியின் யுவான்டஸ் அணியில் இணைந்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் நம்பிக்கை தூணாக இருந்த ரொனால்டோ வெளியேறியதால், அதற்குப் பதிலாக மாற்று வீரரை ரியல் மாட்ரிட் தேடிவருகிறது.

    இந்நிலையில் பெல்ஜியம் அணி கேப்டனான ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு (1353 கோடி ரூபாய்) கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.



    27 வயதாகும் ஈடன் ஹசார்டு தலைசிறந்த அட்டக்கிங் மிட்பீல்டர் ஆவார். மேலும் வேகமாக ஓடுவதில் வல்லவர். அத்துடன் பந்தை பாஸ் செய்வதில் வல்லவர். இவரை சூப்பர் பாஸ்ஸர் (Super Passer)  என்றும் அழைப்பதுண்டு.

    கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 208 போட்டிகளில் விளையாடி 69 கோல் அடித்துள்ளார். பெல்ஜியம் அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 24 கோல்கள் அடித்துள்ளார்.
    Next Story
    ×