search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா வெற்றி- இங்கிலாந்து பறக்கிறார்
    X

    யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா வெற்றி- இங்கிலாந்து பறக்கிறார்

    யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றதால் ரோகித் சர்மா 23-ந்தேதி சக வீரர்களுடன் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார். #ENGvIND #RohitSharma
    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று முடிந்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மாவிற்கு யோ-யோ டெஸ்ட் நடைபெறாமல் இருந்தது. இவருக்கு ஐபிஎல் தொடரின்போது இரண்டு முறை யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டது அப்போது தோல்வியடைந்தார்.



    இதனால் தற்போது ரகனாவை மாற்று வீரராக தயார் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மூலம் இவர் அணியின் சக வீரர்களுடன் இங்கிலாந்து பறக்கினார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி வரும் 23-ந்தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது.
    Next Story
    ×