search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலி உம்ரிகர் விருதுக்கு விராட் கோலி தேர்வு
    X

    பாலி உம்ரிகர் விருதுக்கு விராட் கோலி தேர்வு

    இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதாக கருதப்படும் பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana

    பெங்களூரு:

    பிசிசிஐ சார்பிலான விருதுகள் வழங்கும் விழா வருகிற 12-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்தியா அளவில் சிறந்த சிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 12-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் கோலிக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2016-17, 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்திய ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிகள் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடியுள்ளன. இந்த காலகட்டத்தில் இந்திய ஆண்கள் அணி பல தொடர்களை வென்றது. அதே போல பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

    இந்த காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் பெண்கள் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (2016-17) மற்றும் ஸ்மிரிதி மந்தனா (2017-18) ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்த வீராங்கனைகள் என்ற விருதை முதன்முறையாக பெருகின்றனர். 



    அதே போல் இந்திய கிரிக்கெட்டை மிக உயரத்திற்கு கொண்டு சென்ற ஜெக்மோகன் டால்மியா பெயரிட்டு 4 விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதில் அதிக ரன் எடுத்த வீரர், அதிக விக்கெட் எடுத்த வீரர், U-16 விஜய் மெர்சண்ட் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆண் மற்றும் பெண் வீரருக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    அதே போல் பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக 2016-17 சீசனில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் பிசிசிஐ சார்பாக வழங்கப்படும் விருதுக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana
    Next Story
    ×