என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுன்ட்டி கிரிக்கெட் இல்லாமலும் விராட் கோலி சிறந்த வீரர்தான் - ஹர்பஜன் சிங்
Byமாலை மலர்27 May 2018 11:17 AM GMT (Updated: 27 May 2018 11:17 AM GMT)
கவுன்ட்டி கிரிக்கெட் இல்லாமலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #ViratKohli
இந்திய அணி கேப்டனாக விராட் கோலி கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்று விளையாடிய போது மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் ஆஸ்திரேலியா சென்ற தொடரில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.
இந்தியா அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சர்ரே அணியில் இணைந்து கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.
துரதிருஷ்டவசமாக கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு நன்றாக இருக்க வேண்டும். அவரது காயம் பயப்படக்கூடிய அளவிற்கு பெரிதானதல்ல. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன. கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், இந்த நேரம் அவருக்கு நல்லதாக அமையும்.
ஏனென்றால், அவரது காயம் குணமடைய ஓய்வு தேவை. கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதை விட பெரிய அளவில் யோசிப்பது தயார் ஆவதற்கு சிறந்ததாகும். கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும் இன்னும் அவர் சிறந்த வீரர்தான்.’’ என்றார்.
இந்தியா அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சர்ரே அணியில் இணைந்து கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.
துரதிருஷ்டவசமாக கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு நன்றாக இருக்க வேண்டும். அவரது காயம் பயப்படக்கூடிய அளவிற்கு பெரிதானதல்ல. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன. கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், இந்த நேரம் அவருக்கு நல்லதாக அமையும்.
ஏனென்றால், அவரது காயம் குணமடைய ஓய்வு தேவை. கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதை விட பெரிய அளவில் யோசிப்பது தயார் ஆவதற்கு சிறந்ததாகும். கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும் இன்னும் அவர் சிறந்த வீரர்தான்.’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X