என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் தொடரில் எம்எஸ் டோனியின் ஆட்டம் ஆச்சர்யம் அளிக்கவில்லை- கேரி கிர்ஸ்டன்
Byமாலை மலர்15 May 2018 9:27 AM GMT (Updated: 15 May 2018 9:27 AM GMT)
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனியின் ஃபார்ம் ஆச்சர்யம் அளிக்கவில்லை என இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார். #IPL2018 #msdhoni
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடைக்குப்பின் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் எம்எஸ் டோனி நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை முடிந்துள்ள 12 ஆட்டத்தில் 3 அரைசதங்களுடன் 413 ரன்கள் அடித்து 9-வது இடத்தில் உள்ளார். 12 ஆட்டத்தில் 8-ல் நாட்அவுட்டாக உள்ளார். சராசரி 103.25 ஆகும். 29 சிக்சர்கள் விளாசி அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்எஸ் டோனி 5-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா முன்னாள் பேட்ஸ்மேன் கேரி கிர்ஸ்டன் பணியாற்றினார்.
இவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது ஐபிஎல் தொடரில் டோனி அபாரமாக விளையாடி வருவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதுவரை முடிந்துள்ள 12 ஆட்டத்தில் 3 அரைசதங்களுடன் 413 ரன்கள் அடித்து 9-வது இடத்தில் உள்ளார். 12 ஆட்டத்தில் 8-ல் நாட்அவுட்டாக உள்ளார். சராசரி 103.25 ஆகும். 29 சிக்சர்கள் விளாசி அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்எஸ் டோனி 5-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா முன்னாள் பேட்ஸ்மேன் கேரி கிர்ஸ்டன் பணியாற்றினார்.
இவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது ஐபிஎல் தொடரில் டோனி அபாரமாக விளையாடி வருவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X