search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறினார் மார்க் வுட்
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறினார் மார்க் வுட்

    இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க தயாராக வேண்டி இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் வெளியேறியுள்ளார். #IPL2018 #CSK
    ஐபிஎல் 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் இடம்பிடித்திருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அந்த போட்டியில் நான்கு ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தற்போது இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பதற்காக பயிற்சியில் ஈடுபட சென்னை அணியில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார்.



    இதுகுறித்து மார்க் வுட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘இங்கிலாந்தில் சம்மர் காலத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் தயாராவதற்காக சொந்த நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளேன். கடினமாக பயிற்சி பெற்று டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இல்லை. துர்காம் அணியில் விளையாட இருக்கிறேன். இதன்மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×