search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்.:  திண்டுக்கல் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி
    X

    டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 2-வது சீசன் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 2-வது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

    டாஸ் வென்ற தூத்துக்குடி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான வாஷிங்டன் சுந்தர் 48 பந்தில் 69 ரன்களும், கவுசிங் காந்தி 33 பந்தில் 46 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில், வந்த நாதன்(20), ஆனந்த் சுப்பரமனியன்(26) ரன்கள் எடுத்தனர். 

    பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் அணியில் கங்கா ஸ்ரீதர் 55 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விவேக் 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். 

    தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.  தூத்துக்குடி அணியில் 69 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    Next Story
    ×